மு.க.அழகிரி தொடர்பான வழக்கில் 12ஆம் தேதி தீர்ப்பு

by Staff / 09-02-2024 04:16:59pm
மு.க.அழகிரி தொடர்பான வழக்கில் 12ஆம் தேதி தீர்ப்பு

2011 தேர்தலில் தாசில்தாரை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக பதிவான வழக்கில் பிப்.12ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது. விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். மேலூர் அருகே வல்லடிகாரர் கோயிலில் தாசில்தார் காளிமுத்து உள்ளிட்டோரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி, மன்னன், ரகுபதி உட்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via