தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அமைதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

by Editor / 11-02-2024 09:16:36pm
தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அமைதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஜனநாயக ரீதியாக எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் அமைதி பேரணி தென்காசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பிருந்து துவங்கி புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்தப் பேரணியை மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசர் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அல் அமீன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் முதியோர் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், துணைத் தலைவர் ஹாஜா மைதீன், துணை செயலாளர் அப்துல் பாசித் தொண்டரணி செயலாளர் தாவூத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அன்வர் சாதிக் நன்றி கூறினார்.

 

Tags : தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அமைதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

Share via