ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி சாத்தியமாகும்? - ஈ.ஆர்.ஈஸ்வரன்

by Staff / 14-02-2024 12:48:48pm
ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி சாத்தியமாகும்? - ஈ.ஆர்.ஈஸ்வரன்

வடக்கே பல மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறீர்கள், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி சாத்தியமாகும்? நாங்கள் சந்தேகப்படுவது சரிதானே, என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் மீது பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளை கைவிடக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கிறோம். அரசியல் நோக்கத்திற்காக, ஆட்சியை தக்கவைப்பதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்படுகிறது. நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் அதிகாரிகளை பிரதமரே நியமிப்பார் என்றால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? என கேள்வியெழுப்பினார்.

 

Tags :

Share via