செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு

by Staff / 14-02-2024 02:24:32pm
செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரும் தலைமறைவாக உள்ள நிலையில் செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியில் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

 

Tags :

Share via