ஓமலூர் அருகே தேங்காய் நார் குடோனில் பயங்கர தீ விபத்து

by Staff / 19-02-2024 05:32:49pm
ஓமலூர் அருகே தேங்காய் நார் குடோனில் பயங்கர தீ விபத்து

கலர்பட்டி, செம்மண்கூடல் பகுதியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையில் மதியம் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பற்றி எரிய தொடங்கிய நிலையில் உடனடியாக அருகில் உள்ளவர்கள் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீ முழுவதும் அணைக்கப்பட்டது.தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via