மகாராஷ்டிராவில் மீண்டும் இட ஒதுக்கீடு போராட்டம்

by Staff / 26-02-2024 02:42:30pm
மகாராஷ்டிராவில் மீண்டும் இட ஒதுக்கீடு போராட்டம்

மகாராஷ்டிராவில் மீண்டும் இட ஒதுக்கீடு போராட்டம் மராத்தா சமூகத்தினரால் வெடித்துள்ளது. அம்பாட் தாலுகாவின் தீர்த்தபுரி நகரத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சவுக்கில் மராட்டிய போராட்டக்காரர்கள் அரசுப் போக்குவரத்துப் பேருந்தை எரித்தனர். இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் (MSRTC) போலீசில் புகார் அளித்துள்ளது. இதன் பின்னணியால் ஜல்னா பகுதியில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via