ராஜீவ் கொலை வழக்கு - சாந்தன் காலமானார்

by Staff / 28-02-2024 11:15:48am
ராஜீவ் கொலை வழக்கு - சாந்தன் காலமானார்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் காலமானார். கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வந்த சாந்தன், அவரது சொந்த நாடான இலங்கை திரும்புவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
 

 

Tags :

Share via