3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.. பாகிஸ்தான் கும்பல் கைது

by Staff / 28-02-2024 12:26:46pm
3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.. பாகிஸ்தான் கும்பல் கைது

இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் அரபிக்கடலில் 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு.இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குஜராத்தில் போர்பந்தர் கடற்கரையில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 3089 கிலோ சரஸ், 158 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 25 கிலோ மார்பின் ஆகியவற்றை கடத்திய சிறிய கப்பலை கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். இதனை கடத்தி வந்த ஐந்து பாகிஸ்தானியர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via