முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதல்... படுகாயமைடைந்த 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

by Admin / 04-08-2021 02:36:42pm
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதல்... படுகாயமைடைந்த 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..



உளுந்தூர்பேட்டையில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடை மகன்கள், கலைமணி மற்றும் கலைவாணன். இவர்களுக்கும் அதே தெருவை சேர்ந்த மதி மற்றும் அவருடைய மகன்கள் சூரியா, அஜித் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பயங்கர ஆயுதங்களால் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

 இதில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via