தெலங்கானாவில் கோர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

by Staff / 04-03-2024 12:05:31pm
தெலங்கானாவில் கோர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

தெலங்கானா மாநிலம் கொத்தகோட்டா என்ற இடத்தில் பயங்கர விபத்து நடந்துள்ளது. சாலையோரதில் உள்ள மரத்தின் மீது அவ்வழியே வந்த கார் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாகத் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via