நண்பனை அடித்து கொன்ற இருவர் கைது

by Staff / 05-03-2024 01:15:45pm
நண்பனை அடித்து கொன்ற  இருவர் கைது

. மயிலாப்ரைபூ சேர்ந்த சுமேஷ் (20). இவர் நேற்று முன்தினம் மாலை, வண்டலூர் பகுதியில் உள்ள  நண்பர் லோகேஷ், தயாகரன் மற்றும் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த 3 நண்பர்கள் ஆகியோருடன் , புதுபெருங்களத்தூர், கேப்டன் சசி நகரில் ஒன்றாக மதுகுடித்துள்ளனர். , போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அடிதடியாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த  லோகேஷ் - தயாகரன் அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து, சுமேஷின் தலையில் ஓங்கி அடிக்க.. இதில் சுமேஷ்  படுகாயமடைந்து மயங்கி  அதிகளவு  ரத்தப்போக்கு காரணமாக  சம்பவ இடத்திலே உயிரிழந்தார்

.இதையடுத்து, நண்பர்கள் இருவரும் அங்கிருந்து தப்பினர் .இதை பார்த்த அக்கம் பக்கத்தினர்,  பீர்க்கன்காரணை போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுமேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சுமேஷின்  இருநண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via