போக்ஸோ கைதி மத்திய சிறையில் உயிரிழப்பு

விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த ஜேசுராஜ் 62 போக்ஸோ வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில் இவர் நேற்று சிறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :