ஆயிரம் ரூபாய் பாக்கிக்காக காரேற்றி தொழிலாளியை கொன்றவர் கைது.

by Editor / 18-03-2024 12:08:57am
ஆயிரம் ரூபாய் பாக்கிக்காக காரேற்றி தொழிலாளியை கொன்றவர் கைது.

சாத்தான்குளம் அருகே புத்தன்தரு பகுதியை சேர்ந்த தொழிலதிபர். மதீன். பல்வேறு தொழில் நடத்தி வருகிறார். இவரது மெடிக்கல் ஷாப்பில் அதே ஊரைச் சேர்ந்த இம்ரான்  என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மீரான் (47). இவர்  வீ ட்டில் பானிபூரி தயாரித்து ஊர், ஊராக விற்பனை செய்து வருகிறாா். நேற்று முன் தினம்  பானிபூரி வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டு முன் நின்று கொண்டிருந்த மீரான் மீது  கார் திடீரென்று வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மீரான் பரிதாபமாக உயிரிழந்தார்.. 
தகவலறிந்த சாத்தான்குளம் டி.எஸ்.பி கென்னடி, தட்டார்மடம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன், எஸ்.ஐ   குரு மைக்கேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீரான் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டதில் புத்தன்தரு மதீன் என்பவருக்கு சொந்தமான மெடிக்கல் ஸ்டோரில் மருந்து, மாத்திரைகள் வாங்கியதற்காக மீரான் ரூ.1,000 கொடுக்க வேண்டியிருந்தது.. இதை கடை உரிமையாளர் மதீன் வசூலித்து தரும்படி இம்ரானிடம் கேட்டுள்ளார். இம்ரான், மீரான் வீட்டுக்கு அடிக்கடி சென்று ரூ.1,000த்தை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் விரைவில் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் மீரான் வீட்டில் இல்லாத நேரத்தில் சென்று அவரது மனைவியிடம், இம்ரான் பாக்கியை கேட்டுள்ளார். இது மீரானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து அவர் தட்டிக் கேட்கவே, 2 பேருக்கும் இடையே  முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்றிரவு வீட்டு முன் நின்றிருந்த மீரானை கார் ஏற்றி இம்ரான் கொன்றது, தெரியவந்தது. இதையடுத்து புத்தன்தருவில் பதுங்கியிருந்த இம்ரானை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான மதீனை பிடிக்க தட்டார்மடம் எஸ்.ஐ டேவிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags : ஆயிரம் ரூபாய் பாக்கிக்காக காரேற்றி தொழிலாளியை கொன்றவர் கைது.

Share via