மதுபான கொள்கை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து 34.5 கோடி நிதி பெற்ற பாஜக
ஆம் ஆத்மி கட்சி அரசால் டெல்லி மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, மதுபான உரிமம் வழங்கும் செயல்முறையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி சரத் சந்திர ரெட்டி முக்கிய பங்கு வகித்ததாக அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டில் தெலங்கானா முன்னாள் முதல்வர்கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மதுபான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கவிதாவும், தொழிலதிபர் பி.சரத்சந்திர ரெட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.34.5 கோடியை பாஜகவுக்கு வழங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது.
Tags :