அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் பலி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பாசார் ஊராட்சியை சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன் (20), கலியபெருமாள் மகன் பரணி (20), திலீப்குமார் மகன் சதீஷ்குமார் (20) ஆகிய மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கல்லூர் கூட்ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரின் உடல்களும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags :