உயிர்பிழைக்க இலங்கையிலிருந்து தப்பி வந்த மூதாட்டி தமிழ்நாட்டில் உயிரிழப்பு
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் தப்பி வந்து கடற்கரையில் மயங்கிக் கிடந்த முதிய தம்பதியில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து இதுவரை 96 தமிழர்கள் கடல் வழியாக தமிழகம் வந்துள்ளனர். அந்தவகையில் கடந்த 27-ம் தேதி தனுஷ்கோடி ஏழாம் தீடை பகுதியில் வயதான தம்பதி மயங்கிய நிலையில் கிடந்தனர். விசாரணையில் அவர்கள் திரிகோணமலையைச் சேர்ந்த 80 வயதான பெரியண்ணா மற்றும் அவரது 70 வயது மனைவி பரமேஸ்வரி என்பது தெரிய வந்தது. அவர்கள் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் அந்த தம்பதி, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் பரமேஸ்வரி இன்று உயிரிழந்தார். பெரியண்ணாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிர் பிழைக்க தப்பித்து வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :