தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

by Staff / 29-03-2024 04:08:50pm
தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via