ஏசி வெடித்து பயங்கர விபத்து - குழந்தை உட்பட நான்கு பேர் பலி

by Staff / 31-03-2024 04:57:14pm
 ஏசி வெடித்து பயங்கர விபத்து - குழந்தை உட்பட நான்கு பேர்  பலி

குஜராத்தின் துவாரகாவில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். துவாரகா நகரில் ஆதித்யா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏர் கண்டிஷனர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்த போதே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via