100 அடி பள்ளத்தில் விழுந்தவர் பத்திரமாக மீட்பு
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தூத்துக்குடியை சேர்ந்த தன்ராஜ் என்ற இளைஞர், இன்று காலை டால்ஃபின் நோஸ் பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்ற போது, கால் இடறி 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இளைஞரை மீட்கும் பணியை தீவிரப் படுத்தினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கை, கால் மற்றும் தலையில் சிறு காயங்களுடன் இருந்த அவரை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
Tags :