பகவான் மகாவீரரை நாம் அனைவரும் வணங்குகிறோம்- பிரதமர் நரேந்திர மோடி

சமண மதத்தின் 24 ஆவது தீா்த்தங்கரர் மகாவீரா் ஜெயந்தி இன்று இந்தியா முழுவதும் உள்ள சைன மதத்தை பின்பற்றக்கூடிய மக்கள் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள். பிரதமர் நரேந்திர மோடி மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை எக்ஸ் வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்-.
அகிம்சை, உண்மை மற்றும் இரக்கத்தை எப்போதும் வலியுறுத்திய பகவான் மகாவீரரை நாம் அனைவரும் வணங்குகிறோம். அவரது கொள்கைகள் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு பலத்தை அளிக்கின்றன. அவரது போதனைகள் சமண சமூகத்தால் அழகாகப் பாதுகாக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. பகவான் மகாவீரரால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி சமூக நல்வாழ்வுக்கு பங்களித்துள்ளனர்.
பகவான் மகாவீரரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற எங்கள் அரசு எப்போதும் பாடுபடும். கடந்த ஆண்டு, பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியோம், இது மிகுந்த பாராட்டைப் பெற்றது.
Tags :