பிரச்சினை செய்ய விரும்பவில்லை - வருமான வரித்துறை விளக்கம்

by Staff / 01-04-2024 01:33:06pm
பிரச்சினை செய்ய விரும்பவில்லை - வருமான வரித்துறை விளக்கம்

வங்கி கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விளக்கம் அளித்த வருமான வரித்துறை, “தேர்தலின் போது எந்த கட்சிக்கும் பிரச்சனை ஏற்படுத்த விரும்பவில்லை. காங்கிரஸிடம் இருந்து ரூ.1700 கோடியை வசூலிக்க எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்” என உறுதி அளித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்று வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

 

Tags :

Share via