ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் அளித்த அதிமுக.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மீது தேர்தல் ஆணையமத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. அதில், தேர்தல் நடத்தை விதிப்படி நிதி தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்க கூடாது. ஆனால், ரூ.1,000 உரிமை தொகை கிடைக்காத பெண்களுக்கு அத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறல். திமுக தலைமை அலுவலகத்தில், மக்களவை தேர்தல் பணி அலுவலகத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், உயர் நீதின்ற அரசு கூடுதல் வழக்கறிஞர்கள், திமுக தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதுபோல புகைப்படம் வெளியானது. இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags : ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் அளித்த அதிமுக.