பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்தவர் கைது
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த கருப்பசாமி (46). . அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கடை எதிரே 46 வயது பெண் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செல்பி எடுத்தார். இதனை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் அந்த பெண்ணிடம் இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி போட்டோவை காட்டி பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்து கருப்பசாமி தொந்தரவு செய்துள்ளார்.. ஆனால் அதற்கு அந்த பெண் உடன்படாமல் கருப்பசாமியை கண்டித்துள்ளாா்...இதனையடுத்து நேற்று அந்த பெண் தனது கடை அருகே நடந்து சென்று கொண்டிருக்க.. அப்போது அங்கு வந்த கருப்பசாமி மீண்டும் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து அப் பெண் வடவள்ளி போலீசில் புகாரளித்தார். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.
Tags :