இந்தியாவில் சிந்து சமவெளி காலகட்டத்தில் சிவ வழிபாடு

by Admin / 30-05-2025 08:51:59am
 இந்தியாவில் சிந்து சமவெளி காலகட்டத்தில் சிவ வழிபாடு

இந்து மதம் பல கடவுளை வழிபடக்கூடிய மதம்.. இருப்பினும் சிவனையே அது மூலக்கடவுளாக கொண்டு திகழ்கின்றது.  சிவன் என்று அழைக்கப்படும்  ஸ்வம் எனும் சமஸ்கிருத பெயர் சொல்லுக்குரிய பொருள் தானே தோன்றியது என்பதுதான் .அதன் பொருட்டே, சிவனை ஆதிமூலம் என்றும் பிறப்பு -இறப்பு அற்றவன் என்றும் அடிமுடி காண இயலாதவன் என்றும் கூறுவர் .சிவன் என்றால் அன்பு, இன்பம், மங்கலம் என்ற பொருளும் கொள்ளப்படுகின்றன. சிவன், அன்பாக, அருட்பெருஞ்ஜோதியாக ,இன்ப வடிவாக ஈஸ்வனாக ,மங்களமாக, மறைபொருளாக, பிரபஞ்சம் எங்கும் நீக்கமற வியாபித்து இருப்பதனால், இந்து மதத்தில் சிவ வழிபாடு முதன்மை பெற்ற திகழ்கின்றது

.இந்தியாவில் சிந்து சமவெளி காலகட்டத்தில் சிவ வழிபாடு சிறப்பாக பின்பற்றப்பட்டு இருப்பதாக தெரிகின்றது. ரிக் வேதம் சிவனை ருத்ரனாகவும் எதிர் வேதம் மகா தேவனாகவும் குறிப்பிடுகின்றன .பொதுவாக வேதங்களும் உபநிடதங்களும் சிவனை ,ருத்ரன் என்ற பெயரிலேயே அழைக்கின்றனர் .என்றும் இன்பங்களை நீக்குபவன் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றன .அதாவது தன்னைத் தேடி வரும் பக்தர்களின் இதய இருளை நீக்கி பேரின்ப பேரொளி காட்சியான நிலையை எய்த செய்ததனாலே அவன் இவ்வாறு போற்றப்படுகிறான். அத்துடன் சிவன் ந நன்னுமித்தானவன் என்றும் சிறப்பிக்கப்படுகிறான் .சதாசிவ மூர்த்தி பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் சிவன் என்ற பெயரை நிலை பெற்று வழங்கி வருகின்றது. சிவபெருமானின் வழிபாட்டு சிறப்புகளை வேதங்கள் இதிகாசங்கள் உபநிடதங்கள் புராணங்கள் இலக்கியங்கள் அத்தனையும் எடுத்துரைக்கின்றன .ருத்ர சிவன் திரி பு ரத்தை அழித்து அசுரர்களை வென்ற கதையும் வேள்வியில் பிற தெய்வங்களுடன் போட்டியிட்டு அவர் பாதத்தை கைப்பற்றிய கதையும் யஜுர் வேதத்தில் இடம்பெற்றுள்ளன. சிவனைப் பற்றி ராமாயணமும் மகாபாரதம் பல்வேறு கதைகளை கூறுகின்றன.

ராமாயணமும் பகிரதன் தவத்தால் கங்கையை தம் சடையிலே தாங்கியதும் பாற்கடலில் கலந்த நஞ்சை உண்டதனையும் திரிபுரம் எரித்தகதையும் தட்சனின் யாக கதையும் எடுத்து புகழ்கின்றன. இது போன்று பாரதத்தில் பார்த்தன் இமயத்தில் தவம் புரிந்து சிவனிடம் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்ற கதையும் உள்ளது .அனு சாஸ்த பருவத்தில் கண்ணனே உபமன்யு என்ற குருவிடம் சிகிச்சை பெற்று தவம் செய்து மகாதேவனையும் உமையையும் தரிசித்து வரம் பெற்ற கதையும் இடம் பெறுகின்றது .நிவேதாச வதர உபநிடதம், தேவர்களுக்கெல்லாம் தேவனான மகேஸ்வரனை தவத்தாலும் அடையலாம்-. பக்தியாலும் அடையலாம்.. சிவ கதி இன்றி வேறு செல் கதிஇல்லை என்று நினைத்து வழிபாடுவருக்கு, தன் அருளாலே அருள் பாலிக்கிறான் என்று சிவனை அடையக்கூடிய வழியைப் புகழ்கின்றது..

 இந்தியாவில் சிந்து சமவெளி காலகட்டத்தில் சிவ வழிபாடு
 

Tags :

Share via