பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் தேமுதிக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு.

தேனி மாவட்டம் போடியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (ஏப்.13) பிரச்சாரம் செய்தார். அப்போது போடி தேவர் சிலை பகுதியில் அனுமதியின்றி பதாகைகளும் அதிமுக, தேமுதிக கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. இது குறித்து தேர்தல் பறக்கும்படை அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், போடி தேமுதிக நகர செயலர் முருகவேல், அதிமுக நகர செயலர் மாரியப்பன் ஆகியோர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
Tags : பிரேமலதா விஜயகாந்த்