39 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளுடன் பிடிபட்ட  ஆறு பேருக்கு ஏழு வருடம் சிறை தண்டனை

by Editor / 23-04-2024 12:59:08am
39 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளுடன் பிடிபட்ட  ஆறு பேருக்கு ஏழு வருடம் சிறை தண்டனை

கடந்த 2016 ஆவது வருடம் வி கே புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலிங்கப்பட்டி அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு நபர்களிடமிருந்து 39 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள, 79 - 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று தென்காசி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமதி  மாரீஸ்வரி  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.தொடர்ந்து கள்ள நோட்டுகளுடன் பிடிபட்ட இடையார்தவனையை சேர்ந்த ஐயப்பன், தாயார்தோப்பைச் சேர்ந்த சேர்மலிங்கம், மோசஸ் ராஜ்குமார், ராஜபாளையத்தைச் சேர்ந்த வீரபாண்டியன், ராஜபாண்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த  மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிபதி ஏழு வருடம் சிறை தண்டனை அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.

 

Tags : கள்ள நோட்டுகளுடன் பிடிபட்ட  ஆறு பேருக்கு ஏழு வருடம் சிறை தண்டனை

Share via