பெங்களூரு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 23-04-2024 11:36:59am
பெங்களூரு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்


பெங்களூரு ஜாலஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு நேற்று ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், ‘ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டு வைத்ததுபோல், கடம்பா ஹோட்டலிலும் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன’ என எழுதப்பட்டு இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்ற போலீசார், அங்கிருந்தவர்களை வெளியேற்றிய பின் தீவிர சோதனை நடத்தினர். பின்னர், அந்த வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. தொடர்ந்து, கடிதம் அனுப்பிய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via