ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர்-கூலிப்படை கும்பல்பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓட்டம்

by Admin / 23-04-2024 11:37:31am
ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர்-கூலிப்படை கும்பல்பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓட்டம்

ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர் மாரி செல்வம் என்பவர் வீட்டில்  பாம்பு கார்த்திக் என்பவர் தலைமையிலான கூலிப்படை கும்பல்  4  கார்கள் இரண்டு பைக்குகளில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓட்டம் - தடயங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி -ராஜூ நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை மகன் மாரிசெல்வம் இவர் வழக்கறிஞர்.

கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாம்பு கார்த்திக் என்பவர் சில தினங்களுக்கு முன்பு ராஜீவ் நகரை சேர்ந்த லட்சுமணன் என்ற சிறுவனை வீடுகளில் இருந்து ரேஷன் அரிசி வாங்கித் தருவதற்கு கட்டாயப்படுத்தி உள்ளனர். இதற்கு லட்சுமணன் மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரி செல்வம் பாம்பு கார்த்தியை தொடர்பு கொண்டு எதற்காக சிறுவன் லட்சுமணனை அடித்தாய் என்ன கேள்வி கேட்டுள்ளார்.  இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று  நள்ளிரவு 2 மணி அளவில் பாம்பு கார்த்திக் மாரி செல்வத்தை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளார். அதனைத் தொடர்ந்து அதிகாலையில் பாம்பு கார்த்திக் தலைமையில் 4  கார்கள் இரண்டு பைக்குகளில் வந்த 20-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வழக்கறிஞர் மாரி செல்வத்தின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவைத் திறந்து வழக்கறிஞர்கள் மாரி செல்வம் வெளியே வந்த போது அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசி விட்டு தப்பி ஓடி உள்ளது. இதில் அவரது வீட்டின் முன் பகுதி ஜன்னல்  வழியாக வீட்டுக்குள் விழுந்தன. அப்பகுதியில் இருந்த பொருள்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் கஞ்சா தொழில் கொடிகட்டி பறந்து வருகிறது. இதில் ஏற்கனவே பல்வேறு குழுக்கள் இடையே தொழில் போட்டிகளும் பகைகளும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்துவதற்காக சிறுவனை கட்டாயப்படுத்திய சம்பவத்தில் தட்டி கேட்டா வழக்கறிஞர் மாரிச்செல்வம் வீட்டின் மீது கூலிப்படை கும்பல் பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.. 

 

ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர்-கூலிப்படை கும்பல்பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓட்டம்
 

Tags :

Share via