பள்ளி மாணவர்களை தாக்கிய தேனீக்கள்

by Staff / 24-04-2024 04:33:14pm
பள்ளி மாணவர்களை தாக்கிய தேனீக்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் பாஹ் பகுதியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்திற்குள் எதிர்பாராத விதமாக தேனீக்கள் புகுந்தன. தொடர்ந்து, பள்ளியில் இருந்த மாணவர்களை தாக்கின. இந்த தேனீக்கள் தாக்கியதில் 40 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via