கோடக் மஹிந்திராவில் தலைமை மாற்றம்

by Staff / 02-09-2023 05:21:21pm
கோடக் மஹிந்திராவில் தலைமை மாற்றம்

கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து உதய் கோடக் இன்று ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து, வங்கியின் இடைக்கால தலைவராக தீபக் குப்தா பொறுப்பேற்றார்; நிர்வாகத்தில் தலையிடாத இயக்குனராக உதய் கோடக் தொடர்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ராஜினாமா ஆண்டின் இறுதியில் இருக்கும் என அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்னதாக ராஜினாமா செய்துள்ளார். இதற்கிடையில், வங்கி ஏற்கனவே இந்தியாவின் மத்திய வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குனருக்கு விண்ணப்பம் செய்துள்ளது.

 

Tags :

Share via