தீபத் திருநாள் தீபாவளி பண்டிகை ஓபிஎஸ் வாழ்த்து

by Staff / 23-10-2022 01:53:20pm
 தீபத் திருநாள் தீபாவளி பண்டிகை ஓபிஎஸ் வாழ்த்து

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இந்த தீபத் திருநாள், ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது. இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் இந்நன்நாளில் தனி மனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via