வரிசையில் நின்ற முதியவர் உயிரிழப்பு

by Staff / 26-04-2024 03:38:16pm
வரிசையில் நின்ற முதியவர் உயிரிழப்பு

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பூர் நகரில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. சகன்லால் (79) என்ற முதியவர் தனது பேரனுடன் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். வரிசையில் மற்ற வாக்காளர்களுடன் வாக்களிக்க நின்று கொண்டிருந்தார். ஆனால் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த‌ அவர் வாக்குச்சாவடியிலேயே உயிர் இழந்தார்.

 

Tags :

Share via