கோடைவெயிலின்தாக்கத்தால் உச்சம் தொட்ட மின்சாரபயன்பாடு.

by Editor / 01-05-2024 02:39:22pm
கோடைவெயிலின்தாக்கத்தால் உச்சம் தொட்ட மின்சாரபயன்பாடு.

தமிழ்நாட்டின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்ததுள்ளது. அதன்படி, நேற்று (ஏப்.30) 45.43 கோடி யூனிட் மின் நுகர்வு பதிவாகியுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் பதிவான மிக அதிக மின்சார நுகர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : கோடைவெயிலின்தாக்கத்தால் உச்சம் தொட்ட மின்சாரபயன்பாடு.

Share via