காங். நிர்வாகி மரணம் - 30 பேருக்கு சம்மன்

by Staff / 06-05-2024 05:25:47pm
காங். நிர்வாகி மரணம் - 30 பேருக்கு சம்மன்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என 30 பேருக்கு மாவட்ட காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயக்குமார் மகன் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via