நாய்கள் கடித்து குதறிய சிறுமிக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி

by Staff / 06-05-2024 05:28:15pm
நாய்கள் கடித்து குதறிய சிறுமிக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் தொடர்பாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறும் போது, ”சென்னையில் நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும். சென்னையில் 10,000க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் வளர்த்து வரும் நிலையில் வெறும் 1,200 பேர் மட்டுமே மாநகராட்சியில் பதிவு செய்துள்ளனர்” என்றார்.
 

 

Tags :

Share via