விண்ணப்பித்த அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவு -அமைச்சர் தகவல்

by Editor / 20-12-2021 09:02:03pm
விண்ணப்பித்த அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவு -அமைச்சர் தகவல்

இராஜபாளையம் தொகுதியில் P.S.குமாரசாமிராஜா திருமண்டபத்தில் வைத்து  புதிய இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்கும் ஆணைக்கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான மின்மோட்டார் பொருத்திய மூன்று சக்கரவாகனம் வழங்குதல்,  மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்குதல், கொரோனா இறப்பு நிவாரணத்தொகை வழங்குதல்,  தோட்டக்கலை வேளாண்துறை பொருட்கள் வழங்குதல் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா  உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 931 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.மங்கலராமசுப்பிரமணியன் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன்,  தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் பேசிய தொழில்த்துறை அமைச்சர் தொடர்ந்து மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கும் முதல்வர் நமக்கான முதல்வர் மக்களுக்கான முதல்வர் நமது தமிழக முதல்வர்  எனக்கூறினார்  அதனைத்தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர், இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் தகுதியுடைய அனைவரும் அந்தந்த நலத்திட்ட உதவிகளுக்கான படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்தால் அவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் எனக் கூறினார்.

 இந்நிகழ்வில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ்    முன்னாள் எம்.எல்.ஏ.தனுஷ்கோடி அங்கன்வாடி திட்ட அலுவலர் ராஜம், மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா அவர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ் ஷியாம்ராஜா,, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன்  கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விண்ணப்பித்த அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவு -அமைச்சர் தகவல்
 

Tags :

Share via