வங்கிக் கணக்கிலிருந்து திருடு போன ரூபாய் 17,462 பணத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்தனர்

by Editor / 20-12-2021 08:55:25pm
வங்கிக் கணக்கிலிருந்து திருடு போன ரூபாய் 17,462 பணத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்தனர்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 17,462 எடுக்கப்பட்டுள்ளதாக தனது தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளதாகவும், வங்கிக் கணக்கை சோதனை செய்து பார்த்ததில் பணம் சென்றதாகவும், ஆனால் தான் யாருக்கும் பணம் அனுப்பவில்லை இருப்பினும் வங்கி கணக்கில் இருந்து பணம் சென்றதாக தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்  செண்பக பிரியா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி ராஜசேகரின் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கை ஃப்ரீஸ் செய்து பின்பு விசாரணை மேற்கொண்டு,இழந்த பணம் ரூபாய் 17,462 மீட்டு சைபர் க்ரைம் காவல்துறையினர்  உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.


 

 

Tags :

Share via