மறந்துபோகும் பாரம்பரியம்:ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினம்

by Editor / 05-01-2022 11:33:52pm
மறந்துபோகும் பாரம்பரியம்:ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினம்

 வேஷ்டி இது தமிழர்களின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் அழியத்துவங்கியது.  தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில்  வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்து வருகிறது.பல மாநிலங்களில் சம்பிரதாயத்திற்கு மட்டும் வேஷ்டிகாட்டும் நிகழ்வாக தற்போது மாறிவிட்டது.

வேஷ்டிக்கும் ஒவ்வெரு மாநிலத்திலும் ஒவ்வெரு பெயர் உள்ளது. ஒடிசாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு, அசாமில் சூரியா, மேற்கு வங்காளத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே பான்ச்சே, கேரளாவில் முந்த்து, ஆந்திராவில் பன்ச்சா, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாப்பில் லாச்சா, உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் மர்தானி என்று அழைக்கிறார்கள்.
 
கடல் தாண்டியும் வேஷ்டி அணியும் கலாசாரம் இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு போன்ற நாடுகளிலும் இருந்தது. நாளடைவில், மேற்கத்திய உடை கலாசாரம் மேலோங்கியதால், தமிழகத்தில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் வேஷ்டிக்கு மவுசு நாளுக்கு நாள் குறைந்து விட்டது.

இந்த நிலையில், உலக பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘யுனெஸ்கோ’ நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேஷ்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6-ந்தேதி (இன்று) கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகுதான் இன்றைய இளைஞர்களுக்கு வேஷ்டியின் மகத்துவம் குறித்து வெளியே தெரியத்தொடங்கியது. ஆனாலும், வேஷ்டியை முறையாக கட்டி பழக்கம் இல்லாததால், அதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. சொல்லப்போனால், அரசியல்வாதிகளின் அடையாளமாக மட்டுமே வேட்டி இருந்து வருகிறது.இதனைதொடர்ந்துதான் பல வேஷ்டி தயாரிக்கும் நிறுவனங்கள் கட்டிக்கோ...ஒட்டிக்கோ...என்ற புதிய முறையை தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர்,  
இளைஞர்களை கவரும் வகையில், வேஷ்டியை ஒட்டிக்கொள்ளும் வகையிலும், செல்போன் வைக்க பைகளை வைத்தும், சட்டை,டி சர்ட்களுக்கு ஏற்ற  நிறத்தில் வேஷ்டிக்கு ‘பார்டர்’ வைத்தும் விற்பனைக்கு சந்தைக்கு வந்துள்ளது  என்றாலும், வேஷ்டிக்கு எதிர்பார்த்த அளவு மவுசு கிடைக்கவில்லை.

இன்றைக்கு சர்வதேச வேஷ்டி தினம் என்பதால், அலுவலகம் செல்லும் பலர் வேஷ்டியை அணிந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர்.தமிழகத்திலுள்ள பல அரசு அலுவலகங்களிலும்  வேஷ்டி அணிந்துவர வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் ஆண்களின் ‘வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதள பக்கங்களில், வேஷ்டி அணிந்த படங்கள் அலங்கரிக்கப்போகின்றன. அதன்பிறகு, பழைய நிலையே தொடரும் என்றாலும், வேட்டி அணிவதை ஆண்கள் மிடுக்காக கருத வேண்டும்.தமிழனின் அடையாளம் இது என்பதை உணர்ந்து, தொடர்ந்து அணிவதில் ஆர்வம் காட்ட வேண்டும். கைத்தறி கதர் வேஷ்டிக்களை மறந்த அரசியல் வாதிகள் பளிசென்று தெரியும் வண்ணம் விலையுர்ந்த வேஷ்டியையம்,சட்டைகளையம் அரசியல் நிகல்வுகளுக்கு மட்டும் அணைந்து சென்றுவரும் நிலைய உள்ளது.ஏராளமான மக்கள்பிரதிநிதிகள் இன்று வேஷ்டியை மறந்து பேண்ட் சர்ட்டுக்களுக்கு மாறியுள்ளனர்.எது எப்படியோ தமிழனின் அடையாளம் வேஷ்டிதினத்திலாவது மாறாமல் இருக்கட்டும்.  


 

மறந்துபோகும் பாரம்பரியம்:ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினம்
 

Tags :

Share via