இந்தியாவில் புதிதாக 38,667 பேருக்கு கொரோனா தொற்று

by Admin / 14-08-2021 12:11:33pm
இந்தியாவில் புதிதாக 38,667 பேருக்கு கொரோனா தொற்று

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,87,673 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் ஒரே நாளில் 478 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,732 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,13,38,088 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 35,743 பேர் குணமடைந்துள்ளனர்.
 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,87,673 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

Tags :

Share via