மாணவி ஸ்ரீமதிக்கு நீதிகோரி போராட்டம் தகவல்: சென்னை மெரினா கடற்கரையில் காவலர்கள் குவிப்பு

by Editor / 19-07-2022 08:53:41am
மாணவி ஸ்ரீமதிக்கு நீதிகோரி  போராட்டம் தகவல்: சென்னை மெரினா கடற்கரையில் காவலர்கள் குவிப்பு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கூடப்போவதாக சமூக வலைதளங்கள் மூலம் பரவும் தகவல் காரணமாக கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 Justice for srimathi என்று கூறி சிலர் சமூக வலைதள அழைப்புகள் மூலமாக சென்னையில் கூடுவதற்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மூலமாக போராட்டக்காரரர்கள் கூடும் சில இட விவரங்களை அனுப்பியுள்ளது.

இது குறித்து சென்னை காவல் துறையின் உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்னை நோக்கி வருபவர்களையும் சென்னையில் இருந்து கொண்டு அழைப்புகள் மூலம் உதவுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வாகன சோதனை மூலமாக கண்காணிப்பு தொடர்கிறது. சென்னை நகரை காவல்துறையினர் கண்காணிப்பில்கொண்டு வந்துள்ளனர். இதுபோன்ற தவறான செய்திகளை  பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.


 

 

Tags : Protest for justice for student Smt. Information: Guards gather at Chennai Marina beach

Share via