மாணவி மரண வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகி உள்ளிட்டோரும்,கலவரக்காரர்களும் சிறையில் அடைப்பு

by Editor / 19-07-2022 09:03:56am
 மாணவி மரண வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகி உள்ளிட்டோரும்,கலவரக்காரர்களும் சிறையில் அடைப்பு

கள்ளக்குறிச்சி மாணவி மரண  வழக்கு தொடர்பாக  சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில் மாணவி ஸ்ரீமதியின் வேதியியல் ஆசிரியையான ஹரிப்பிரியா (வயது 40), கணித ஆசிரியை கீர்த்திகா (28) ஆகியோரையும்  போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு காரணமான 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

 மாணவி மரண வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகி உள்ளிட்டோரும்,கலவரக்காரர்களும் சிறையில் அடைப்பு
 

Tags : Private school administrator and rioters jailed in student death case

Share via