400 பேருக்கு பணத்தை திருப்பித்தந்த ஏ.ஆர்.ரஹ்மான்

by Staff / 13-09-2023 12:21:18pm
400 பேருக்கு பணத்தை திருப்பித்தந்த ஏ.ஆர்.ரஹ்மான்

செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பார்க்கமுடியாமல் திரும்பியவர்களில் இதுவரை 400 ரசிகர்களுக்கு பணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் திருப்பித்தந்தார். மேலும், டிக்கெட் நகலை 4,000 பேர் மின்னஞ்சலில் அனுப்பிய நிலையில் இதுவரை 400 பேருக்கு பணம் திருப்பியளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ACTC நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via