2 வாகனங்களில் 2600 கிலோ ரேசன் அரிசி கடத்திய 5 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்

by Editor / 06-09-2023 08:42:34pm
2 வாகனங்களில்  2600 கிலோ ரேசன் அரிசி கடத்திய 5 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்

மதுரை மாவட்டம் வளையங்குளம்  பகுதியில் உள்ள டோலகேட்டில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார்  மற்றும் போலீசார்  வாகன  சோதனை  செய்தனர்.

அந்த வழியாக வந்த TN-58-AF - 1014 லோடு ஆட்டோ வாகனத்தை சோதனை செய்த போது 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி  வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அரிசி கடத்தி வந்த மதுரையை சேர்ந்த பூப்பாண்டி , வடிவேல் மற்றும் செளந்திரபாண்டியன்  ஆகிய மூன்று பேரையும் கைது செய்து , வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்தனர்.

அதே போன்று வளையங்குளம்   பகுதியில் வாகன தணிக்கை செய்தபோது
TN - 51 - AZ-4771 ஆட்டோவில் 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அரிசி கடத்தி வந்த மதுரையை சேர்ந்த வினோத் மற்றும் மலை மன்னன் ஆகிய இருவரையும் கைது செய்து வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து  வந்து வழக்கு பதிவு செய்து  விசாரணை செய்து வருகின்றனர் .

 

Tags :

Share via