ரெயில் முன் பாய்ந்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை

by Staff / 06-09-2023 05:33:33pm
ரெயில் முன் பாய்ந்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை

மார்த்தாண்டம் வெட்டு மணி பகுதியைச் சேர்ந்தவர் வினு குமார் (வயது 47). இவர் செட்டிகுளம் அரசு பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுஷ்மிதா. இவர், கேரளாவைச் சேர்ந்த சுதீர்குமார் என்பவரை திருமணம் செய்து 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார். அதன்பிறகு தான் 2016-ம் ஆண்டு வினுகுமாரை திருமணம் செய்துள்ளார். சுஷ்மிதாவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த அனுகீர்த்தி (15) என்ற மகள் தாயுடனேயே உள்ளார். அவள் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். வினுகுமார்-சுஷ்மிதா தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வினுகுமார் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை, தனது சகோதரருடன் திருமண விழாவுக்குச் செல்வதாக சுஷ்மிதாவிடம் கூறி உள்ளார். இரவில் வரமாட்டேன். நாளை தான் வருவேன் என்றும் கூறிச் சென்றுள்ளார். இந்த சூழலில் வினு குமார், குழித்துறையில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

 

Tags :

Share via