சேலம் தீவட்டிப்பட்டி வன்முறை - விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

by Staff / 06-05-2024 05:34:25pm
சேலம் தீவட்டிப்பட்டி வன்முறை - விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சேலம் தீவட்டிப்பட்டி வன்முறையை கண்டித்து நாளை மறுநாள் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் - தீவட்டிப்பட்டி சாதிய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும், மாரியம்மன் திருவிழாவில் ஆதி திராவிட மக்களுக்கான வழிபாட்டுரிமையை வலியுறுத்தியும் மே-08 அன்று சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via