திருச்செந்தூர் கடலில் மூழ்கி இளைஞர் பலி

by Staff / 22-05-2024 03:09:54pm
திருச்செந்தூர் கடலில் மூழ்கி இளைஞர் பலி

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வைகாசி விசாகத்திற்கு பக்தர்கள் இன்று (மே 22) அதிக அளவில் வருகை தந்திருந்தனர். அதில், தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த பக்தர் செல்வக்கனி என்பவர் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கினர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். தொடர்ந்து, உயிருக்கு போராடிய செல்வக்கணிக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்து காப்பாற்ற முயன்ற நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via