2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிறது பாஜக
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் பலவீனமாக கருதப்படும் வாக்குச்சாவடிகளை பலப்படுத்த சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. தேசிய அளவிலான பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே .பி நட்டா விரைவில் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. 3 மாதங்கள் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி மோடியின் திட்டங்கள் குறித்து பிரசாரத்தில் ஈடுபட பாரதிய ஜனதா பல்வேறு பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ள பொதுக்கூட்டங்களில் கட்சியின் எம்பிக்கள் மாநிலம் மற்றும் மாவட்ட தலைவர்கள் முக்கிய பங்காற்ற உள்ளனர். முதற்கட்டமாக உறுப்பினர்களை அணிகளாகப் பிரிந்து எந்தெந்த வாக்குசாவடிகளை பலப்படுத்த வேண்டும் என கண்டறிந்து மக்களுடன் நேரடித் தொடர்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்வது என 3 கட்டங்களாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags :