ரயிலில் தவறவிட்ட வைரத்தோடு உரிய பயணியிடம் ஒப்படைப்பு.

by Editor / 24-05-2024 10:21:00pm
ரயிலில் தவறவிட்ட வைரத்தோடு உரிய பயணியிடம் ஒப்படைப்பு.

தாம்பரம் - செங்கோட்டை மும்முறை சேவை ரயிலில் கண்டெடுக்கப்பட்ட வைரத்தோடு உரிய பயணியிடம் செங்கோட்டையில் ஒப்படைக்கப்பட்டது.  செங்கோட்டை வந்து சேரும் மும்முறை சேவை ரயில் தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (மே 23) இரவு 9 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் மதுரை கோட்டம் செங்கோட்டை பிரிவை சேர்ந்த பயண சீட்டு பரிசோதகர் டி. கார்த்திகேயன் பணியாற்றி வந்தார். இவர் ரயில் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு செங்கோட்டை வந்து சேர்ந்த போது ரயிலில் பயணி தவற விட்டு சென்ற வைரத் தோட்டை கண்டெடுத்தார். வைரத் தோட்டை செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகளிடம் சமர்பித்து  தவறவிட்ட பயணியிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.  இந்த நேர்மையான செயலைச் செய்த பயண சீட்டு பரிசோதகர் டி. கார்த்திகேயனை ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் சங்கத்தினர் பாராட்டினர்.

 

Tags : ரயிலில் தவறவிட்ட வைரத்தோடு உரிய பயணியிடம் ஒப்படைப்பு

Share via