ஜெயக்குமார் மரண வழக்கு - 30க்கும் மேற்பட்டோருக்கு சம்மன்

by Staff / 27-05-2024 02:29:07pm
ஜெயக்குமார் மரண வழக்கு - 30க்கும் மேற்பட்டோருக்கு சம்மன்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங்கின் மரண வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் 30 பேர் குறித்து தகவல் இருப்பதால் அவர்கள் அனைவருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை (மே 28) அல்லது நாளை மறுநாள் (மே 29) ஆகிய நாட்களில் ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கடந்த மே 4ஆம் தேதி அவரது வீட்டு தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via