மயோனைஸ் சாப்பிட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 27-05-2024 04:23:53pm
மயோனைஸ் சாப்பிட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி

கேரளா மாநிலம் திருச்சூரில் உணவகம் ஒன்றில் சுமார் 70 பேர் குழிமந்தி என்ற உணவை சாப்பிட்டுள்ளனர். அதற்கு வழங்கப்பட்ட மயோனைஸ் உடன் உணவை ருசித்து சாப்பிட்டுள்ளனர். இதை அடுத்து உணவு சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மயோனைஸ் சாப்பிட்டதே இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறியுள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

 

Tags :

Share via